தற்கொலை செய்துகொண்ட சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொகுப்பாளராகவும், சின்னத்திரை நடிகையாகவும் வலம் வந்த சித்ரா கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி தனது கணவர் ஹேமந்துடன் சென்னையில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, சித்ரா தற்கொலைக்கு கணவர் ஹேமந்துதான் காரணமென கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: ஜெய்பீம், கேஜிஎப் 2-வை பின்னுக்கு தள்ளி ஐ.எம்.டி.பியை தெறிக்க விட்ட ‘காந்தாரா’ ! ரசிகர்கள் கொண்டாட்டம்
பின்னர், ஜாமினில் அவர் வெளியே வந்தார். அப்போது, சித்ரா தற்கொலைக்கு காரணமாக முன்னாள் அமைச்சர் ஒருவர் இருப்பதாகவும் சில அரசியல் புள்ளிகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தற்போது ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள சித்ராவின் கணவரான ஹேமந்த், சித்ரா தற்கொலைக்கும் விஜய் டிவியின் தொகுப்பாளரான ரக்ஷனுக்கும் தொடர்பு உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், சித்ராவை ரக்ஷன் பல நாட்களாக தொந்தரவு செய்து வந்ததாகவும் ரக்ஷன் சித்ரா குறித்த அனைத்து தகவல்கள் மற்றும் ஆதாரங்கள் சித்ராவின் நண்பரான ரோகித்திடம் உள்ளது என்றும் கூறியுள்ளார். இவரின் இந்த குற்றச்சாட்டு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.