Friday, March 15, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்ஜெய்பீம், கேஜிஎப் 2-வை பின்னுக்கு தள்ளி ஐ.எம்.டி.பியை தெறிக்க விட்ட 'காந்தாரா' ! ரசிகர்கள் கொண்டாட்டம்

    ஜெய்பீம், கேஜிஎப் 2-வை பின்னுக்கு தள்ளி ஐ.எம்.டி.பியை தெறிக்க விட்ட ‘காந்தாரா’ ! ரசிகர்கள் கொண்டாட்டம்

    ஐ.எம்.டி.பி. படங்களின் ரேட்டிங்கில் இந்திய அளவில் காந்தாரா திரைப்படம் முதல் இடத்தை பிடித்துள்ளது. 

    சமீப காலமாகவே கன்னடத்தில் வெளிவரும் திரைப்படங்கள் இந்திய அளவில் நற்பெயரை சம்பாதித்து வருகின்றனர். உதாரணத்திற்கு கே.ஜி.எஃப், 777 சார்லி போன்ற திரைப்படங்களை சொல்லலாம். இந்த வரிசையில் தற்போது இன்னொரு திரைப்படமும் சேர்ந்துள்ளது. அத்திரைப்படத்தின் பெயர், காந்தாரா. இத்திரைப்படத்தை கே.ஜி.எஃப் திரைப்படங்களை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 

    ரிஷப் ஷெட்டி, சப்தமி கௌடா, மானசி, கிஷோர் உள்ளிட்டோர் நடிப்பில் காந்தாரா திரைப்படம் கடந்த மாதம் 30-ம் தேதி கன்னட மொழியில் மட்டும் வெளியிடப்பட்ட இத்திரைப்படம், நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்த சில நாள்களில் டப் செய்யப்பட்டு முக்கிய மொழிகளில் வெளியிடப்பட்டன. 

    இதையும் படிங்க: ரஜினி, விஜய் வரிசையில் அடுத்து இவர்தான்’ – வெளிப்படையாக சொன்ன பிரபல தயாரிப்பாளர்!

    இத்திரைப்படம் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தனுஷ் உள்பட பல திரையுலக பிரபலங்களும் காந்தாராவைப் பாராட்டி பேசினர். இந்நிலையில், ஐ.எம்.டி.பி. படங்களின் ரேட்டிங்கில் இந்திய அளவில் காந்தாரா திரைப்படம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த படத்திற்கு 9.5 புள்ளிகளை ரசிகர்கள் அளித்துள்ளனர்.

    இதையடுத்து, 8.9 புள்ளிகளுடன் ஜெய்பீம் இரண்டாவது இடத்திலும், 8.4 புள்ளிகளுடன் கேஜிஎப் 2 படம் மூன்றாவது இடத்திலும் உள்ளது. காந்தாரா திரைப்படம் நிலத்திற்காக நடக்கும் பிரச்சனையை படத்தின் மையக்கருவைக் கொண்டு உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....