உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜாதகத்தில் நேரம் சரியில்லை என அதற்கு மக்கள் புதுமையான முறையில் பரிகாரம் தேடி வருகின்றனர்.
நமது ஊர்களில் ராகு, கேது, செவ்வாய் தோஷங்கள் போன்றவற்றுக்கு தான் பரிகாரங்கள் தேடுவோம். அதற்கு மரம் நடுவது, தானம் கொடுப்பது அல்லது குறிப்பிட்ட கோயில்களுக்கு சென்று வருவது போன்ற பரிகாரங்கள் சொல்லப்படுவதை கேட்டிருப்போம். இது நமது ஊர்களில் இந்து சமய ஐதீகங்களாக உள்ளன. இது இந்து பக்தர்களின் நம்பிக்கையாகவும் இருக்கிறது.
கோயிலுக்கு செல்வதை பரிகாரமாக கேட்ட நமக்கு, ஜெயிலுக்கு செல்வது பரிகாரம். அப்படி செய்தால் தோஷம் தீரும் என்று சொன்னால் யார் தான் நம்புவார்?
ஆனால், அப்படிப்பட்ட ஒரு வினோதமான மூடநம்பிக்கை உத்தரகாண்ட் மாநிலத்தில் வதந்தியாக பரவி வருகிறது.
ஜாதகத்தில் நேரம் சரியில்லை என்று ஒரு ஜோதிடர் சொன்னதால், அதற்கு புதுமையான பரிகாரம் தேடும் பழக்கம் அங்கே பரவி இருக்கிறது.
அந்த மாநிலத்தில் வாரத்திற்கு ஒரு முறை 500 ரூபாய் கொடுத்துவிட்டு, ஜெயிலுக்குள் இருந்து விட்டு வரலாம் என்ற திட்டம் உள்ளது.
இந்த திட்டத்தை பயன்படுத்தி ஜாதகத்தில் நேரம் சரியில்லை என்று சொல்லப்படுபவர்கள் 500 ரூபாய் கட்டணம் செலுத்திவிட்டு ஜெயிலுக்குள் செல்கிறார்கள்.அப்படி செல்லும் நபர்களுக்கு ஜெயில் உடை வழங்கப்பட்டு ,அதனுடன் உணவும் அளிக்கப்படுகிறது.
ஜெயிலுக்குள் ஒரு நாள் தங்கி சிறை தண்டனை அனுபவித்து வரும் நபர்களுக்கு தோஷம் விலகிவிடுவதாக அங்குள்ளவர்கள் நம்புகின்றனர்.
இதையும் படிங்க: நவராத்திரி ஸ்பெஷல்.. புதிய மெனுவை அறிமுகப்படுத்திய இந்திய ரயில்வே!