இன்று (ஜூலை 29) காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 19 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கடந்த ஜூலை 16-ம் தேதி அணையின் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனைத்தொடர்ந்து, காவிரி ஆற்றில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று (ஜூலை 29) காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 16,364 கன அடியிலிருந்து 19 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
கடந்த சில நாள்களாகவே சற்று குறைந்து வந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115.30 அடியிலிருந்து மீண்டும் 120 அடியாக உயர்ந்துள்ளது.
இன்று (ஜூலை 29) காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக உள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 19,500 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தால் 5 பேர் பலி