செங்கடலுக்கு அடியில் விஞ்ஞானிகள் அதிசய பகுதி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த பகுதியில் நீந்தி செல்லும் எந்த உயிரினமும் உயிரிழக்கும் என தெரியவந்துள்ளது.
நாம் வாழும் உலகில் பல மர்மங்கள் இருக்கின்றன. அந்த வகையில், செங்கடலுக்கு அடியில் ஆபத்தான பகுதி இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
செங்கடல் பகுதி என்றால் என்ன?
செங்கடலானது உலகின் மிகவும் ஆபத்தான மற்றும் உப்புத்தன்மை அதிகம் நிறைந்த பகுதியாகும். இக்கடல் மத்திய கிழக்கு நாடுகள் – ஆப்பிரிக்கா இடையே அமைந்துள்ளது. மேலும், இப்பகுதி மத்திய தரைக்கடலை இணைக்கும் கடலாகவும் அமைந்துள்ளது.
அமெரிக்காவின் மியாமி பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு செங்கடல் பகுதியில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். கடலுக்கு அடியில் சென்று ஆய்வுகளை மேற்கொள்ளும் தானியங்கி எந்திரத்தை செங்கடலின் அடி ஆழத்தில் பயணிக்க வைத்த விஞ்ஞானிகள் 10 மணி நேரம் ஆய்வுகளை மேற்கொண்டனர். ஆய்வின் இறுதி சில நிமிடங்களின் போது கடலுக்கு அடியில் 1.7 கிலோமீட்டர் அடி ஆழத்தில் இப்பகுதி அமைந்துள்ளதை கண்டுபிடித்துள்ளனர்.
மேலும், அந்தப் பகுதி முழுவதும் அதிக அளவிலான உப்புத்தன்மை கண்டறியப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இந்தப் பகுதி முழுவதும் விஷத்தன்மை கொண்ட வேதிப்பொருள் கலந்திருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.
இதில், அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், இந்த பகுதிக்குள் மீன்கள் உள்பட உயிருடன் செல்லும் எந்த ஒரு உயிரினமும் உடனடியாக உயிரிழந்துவிடும் என்பதுதான்.
மேலும், அப்பகுதியில் உள்ள நீரில் முழுவதும் விஷத்தன்மை கொண்ட கொடிய வேதிப்பொருள் கலந்துள்ளதால் அங்கு, நுழையும் உயிரினங்கள் நிச்சயம் உயிரிழந்துவிடும் அல்லது அங்கு நுழையும் உயிரினங்கள் உடனடியாக மயக்கமடைந்து உயிரிழந்துவிடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
உயிருடன் செல்லும் எந்த உயிரினத்துக்கும் மரணத்தை ஏற்படுத்தும் அதிசயமும் ஆபத்தும் நிறைந்த இப்பகுதியை கடலுக்கு அடியில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள நிகழ்வு கடல்சார் ஆராய்ச்சியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
நாம் காணாத பிரபஞ்சத்தின் புகைப்படம் வெளியீடு