இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவுக்கு தப்பியோடியதாக தகவல் வந்த நிலையில், அவரை மீண்டும் இலங்கைக்கே அனுப்ப வலியுறுத்தி மாலத்தீவு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், இலங்கை மக்கள் ஆளும் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
கடந்த சனிக்கிழமை, அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், அதிபர் மாளிகையை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனிடையே, அதிபர் மாளிகையை விட்டு கோத்தபய ராஜபக்சே வெளியேறினார்.
இந்நிலையில், இன்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ராணுவ ஜெட் விமானத்தில் மாலத்தீவுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியது.
சூழல்கள் இப்படியாக இருக்க, மாலத்தீவில் இருந்து கோத்தபய ராஜபக்சேவை இலங்கைக்கே திருப்பி அனுப்ப வேண்டும் என்றும், மாலத்தீவில் அவருக்கு அடைக்கலம் தரக்கூடாது என்றும் கூறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாலத்தீவு மக்களும், மாலத்தீவில் வசிக்கும் இலங்கை மக்களும் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டமானது மாலத்தீவு அதிபர் மாளிகை முன்பு நடைபெற்று வருகிறது.
இலங்கையில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இலங்கையில் ரணில் விக்ரமசிங்கே அவசரநிலை பிரகடனத்தை செயல்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
கோத்தபய ராஜபக்சே குடும்பத்துடன் தப்பியோட்டம்