இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,070 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், இன்று முதல் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம் அணிந்து செல்ல வேண்டுமென மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம், மீறினால் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், தற்போது பள்ளி வளாகத்தில் உள்ள அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது .
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 11,094 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று தமிழக முதல்வர், தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், மக்கள் நல்வாழ்வுத்துறை, பொதுத்துறை மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
மீண்டும் உயரும் கொரோனா தொற்று! கலங்கும் மக்கள்