மேற்கு வங்கத்தில் குளத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 40 தங்க பிஸ்கட்டுகளை எல்லை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.
மேற்கு வங்க மாநிலம், வடக்கு 24 பர்கானாஸ் பகுதியில் தங்கம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள ஒரு குளத்தின் அருகே எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கிலோ எடை உள்ள 40 தங்க பிஸ்கட்டுகளை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பறிமுதல் செய்தனர். எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பறிமுதல் செய்த தங்கத்தின் மொத்த மதிப்பு சுமார் 2.57 கோடி என்று சொல்லப்படுகிறது.
மேலும் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தங்க பிஸ்கட்டுகளை குளத்தில் பதுக்கி வைத்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஆயிரக்கணக்கில் ஊழியர்களை நிறுத்தும் மெட்டா – அதிர்ச்சி தகவல்!