Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாசெயற்கைக்கோள்கள் திட்டமிட்டபடி நிலைநிறுத்தப்பட்டதா? - இஸ்ரோ சொன்ன பதில்..

    செயற்கைக்கோள்கள் திட்டமிட்டபடி நிலைநிறுத்தப்பட்டதா? – இஸ்ரோ சொன்ன பதில்..

    விண்ணில் ஏவப்பட்ட 36 செயற்கைக்கோள்கள், திட்டமிட்டபடி அதன் சுற்று வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

    இங்கிலாந்தை சேர்ந்த ஒன்வெப் நிறுவனத்தின் 72 செயற்கைக் கோள்களை ஜிஎஸ்எல்வி மூலம் விண்ணில் செலுத்த, அந்நிறுவனத்துடன் இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் நிறுவனம் கடந்த ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. 

    வணிக நோக்கிலான இந்த ஒப்பந்தத்தின் கீழ் முதல்கட்டமாக, ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் 36 செயற்கைக்கோள்கள் கடந்த ஆண்டு அக்டோபர் 23-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன.

    இதைத்தொடர்ந்து, 2-வது கட்டமாக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் 36 செயற்கைக்கோள்கள் கடந்த மார்ச் 26-ஆம் தேதி காலை 9 மணி அளவில் விண்ணில் செலுத்தப்பட்டது. 

    இந்நிலையில், 36 செயற்கைக் கோள்களும் பூமியில் இருந்து சுமார் 450 கி.மீ. தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், செயற்கைக்கோள்களின் மொத்த எடை 5,805 கிலோ என்பது குறிப்பிடத்தக்கது. 

    கடலூரில் சோகம்; பள்ளி வேன் மோதியதில் 3 வயது குழந்தை உயிரிழப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....