சென்னையில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக 18 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கோவை கார் வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு, நாடு முழுவதும் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த நபர்களின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் தயார் செய்தது.
இதன்படி சென்னையில் மட்டும் 18 நபர்கள் இந்தப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இன்று சென்னை மண்ணடி, புதுப்பேட்டை, பெரம்பூர் உள்ளிட்ட 5 பகுதிகளில் சென்னை காவல்துறையினர் சிறப்பு சோதனை மேற்கொண்டனர்.
அதேபோல், ஐஎஸ்ஐஎஸ் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் பண பரிவர்த்தனை செய்ததாக 5 பேர் மீது புகார் எழுந்துள்ளது. மேலும் அவர்கள் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது.
என்ஐஏ சோதனை ஒரு புறம் நடைபெற்று வரும் நிலையில், சென்னை காவல்துறையினர் தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடர்பில் இருக்கும் நபர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு, காவல்துறையினர் சோதனை நடத்தி வருவதகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: 35 லட்சம் ரூபாய் மதிப்பில் 650 கிலோ குட்கா பறிமுதல்..! அதிரடி காட்டும் தனிப்படை போலீஸ்