Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்கற்றது தமிழ் திரைப்படம் வெளிவந்து 15 ஆண்டுகள்- நடிகை அஞ்சலி உருக்கம்

    கற்றது தமிழ் திரைப்படம் வெளிவந்து 15 ஆண்டுகள்- நடிகை அஞ்சலி உருக்கம்

    ‘கற்றது தமிழ்’ திரைப்படம் வெளிவந்து 15 ஆண்டுகள் ஆனதையொட்டி, நடிகை அஞ்சலி இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டு, அந்தத் திரைப்படம் குறித்து எழுதியுள்ளார். 

    ராம் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் தான் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளிவந்த கற்றது தமிழ். இந்தத் திரைப்படத்தில் ஜீவா, அஞ்சலி, கருணாஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். தமிழ் கற்ற ஒரு நபர் புரட்சிகர சிந்தனைகளுடன் சமூகத்தை எதிர்கொள்ளும் உளவியல் சார்ந்த திரைப்படமாக கற்றது தமிழ் உருவானது. 

    இந்தத் திரைப்படத்தை பார்த்த பலரிடையே மாறுதல்களை ஏற்படுத்தியது. யுவன் சங்கர் ராஜா மற்றும் நா.முத்துக்குமார் கூட்டணியில் உருவான ‘பறவையே எங்கு இருக்கிறாய்’ பாடலும், ‘உனக்காக தானே இந்த உயிர் உள்ளது’ பாடலும் இன்றளவு யார் கேட்டாலும் ஒரு தனித்துவமான உணர்வைத் தான் தரும். 

    இதையும் படிங்க:தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு பாதிப்பு: சுகாதாரத்துறை எச்சரிக்கை

    இந்நிலையில், கற்றது தமிழ் திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, இன்ஸ்டாகிராமில் நடிகை அஞ்சலி வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:

    ஆனந்தியை உங்களில் ஒருவராக மாற்றியிருப்பதற்கும் உங்கள் மனதில் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பதற்கும் மிக்க நன்றி. ராம் சாருடன் இணைந்து பணிபுரிவது பெருமைக்குரியது. அவருடைய திரைப்படன் தான் இன்று நானாக மாற உதவி இருக்கிறது. 

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....