Saturday, March 16, 2024
மேலும்
    Homeஅறிவியல்அடுத்த 2 மாதங்களுக்கு '144 தடை' உத்தரவு - இராமநாதபுரம் ஆட்சியர் அறிவிப்பு

    அடுத்த 2 மாதங்களுக்கு ‘144 தடை’ உத்தரவு – இராமநாதபுரம் ஆட்சியர் அறிவிப்பு

    இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டு மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜான் டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளதாவது:

    இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், செப்டம்பர் 11-ல் இருந்து இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் அக்டோபர் 30-ம் தேதி கமுதி பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவும் அனுசரிக்கப்படுகிறது.

    இந்த நிகழ்ச்சிகளை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொருட்டு, செப்டம்பர் 9 முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

    இந்த உத்தரவால் மாவட்டத்தில் பொதுக் கூட்டங்கள், போராட்டங்கள், பேரணிகள் நடத்தவும், பொது இடங்களில் ஐந்து பேர் மற்றும் அதற்கு மேற்பட்டோர் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும், மாவட்டத்தில் செப்டம்பர் 9 முதல் 15-ம் தேதி வரையும், அக்டோபர் 25 முதல் 31-ம் தேதி வரையும், வெளி மாவட்டங்களில் இருந்து வாடகை வாகனங்களில் தலைவர்களின் நினைவு பிறந்தநாள் நிகழ்ச்சிகளுக்கு அஞ்சலி செலுத்த வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அஞ்சலி செலுத்தும் இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் ஜோதி ஓட்டங்கள் எடுத்து வரவும் அனுமதி மறுக்கப்படுகிறது. இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு, மாவட்டத்தில் சுமார் 7000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    இராமநாதபுரம் மாவட்டத்தின் எல்லையான மருச்சுக்கட்டி முதல் பரமக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், 145 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட்டும் பரமக்குடியில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டும் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    அதேபோல், இம்மானுவேல் சேகரன் நினைவிடம் அருகே புதிதாக புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து அஞ்சலி செலுத்த வருவோர் வாடகை வாகனங்களில் வரவும், திறந்த வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் வரவும், தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சொந்த வாகனங்களில் வருவோர், அந்தந்த டிஎஸ்பி அலுவலகங்களின் வாகன அனுமதிச்சீட்டு பெற்று வர வேண்டும். வாகனங்களில் ஒலி பெருக்கிகள் அமைத்து கொண்டோ, பேனர்கள் கட்டிக்கொண்டோ, வரக்கூடாது.

    அஞ்சலி செலுத்த வரும் வழிகளில் பட்டாசுகள் வெடிக்கவும், வாகனங்களில் மேற்கூரைகளில் பயணிக்கவும், அனுமதி இல்லை. அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே வந்து, திரும்பிச் செல்ல வேண்டும்.

    மேலும், அஞ்சலி செலுத்த வருவோரின் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகம் மூலம், 200 பேருந்து வசதிகள் செய்து தரப்படும். ஒவ்வொரு பேருந்திலும் அஞ்சலி செலுத்த வருபவருடன் ஒரு காவலர் உடன் வருவார்.

    இதுவரை மாவட்டத்தில் 795 பேர் சொந்த வாகனங்களில் வரவும், அரசியல் கட்சி தலைவர்கள் 10 பேர் அஞ்சலி செலுத்த நேர ஒதுக்கீடு கேட்டும் விண்ணப்பித்துள்ளனர். இவ்வாறு, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: இந்தியாவுடன் பாகிஸ்தானை இணைக்க ராகுல் காந்தி முயற்சிக்க வேண்டும் – அசாம் முதல்வர் கருத்தால் சர்ச்சை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....