சென்னை பாரிமுனையில் மாநகராட்சிக்கு சொந்தமான 130 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
சென்னை பாரிமுனையில் ரத்தன் பஜார், பிரேசர் பிரிட்ஜ் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான 400 கடைகள் உள்ளன. இந்நிலையில், அந்த கடைகளில் 130 கடைகள் மட்டும் கடந்த சில ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, நீண்ட காலமாக வாடகை செலுத்தாமல் உள்ள கடைகளுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இருப்பினும், கடைகளில் இருந்து முறையாக வாடகை வரவில்லை. நிலுவை தொகையாக அந்த 130 கடைகளில் இருந்து மட்டும் சுமார் ரூ.40 லட்சம் வர வேண்டி உள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அந்த 130 கடைகளுக்கும் சீல் வைத்துள்ளனர்.
மேலும், வாடகையை வரைவோலையாக சம்மந்தப்பட்ட கடைகளின் உரிமையாளர்கள் செலுத்தும் பட்சத்தில், சீல் அகற்றப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இறுதியாக இந்தியாவில் உள்ள 10 நகரங்களுக்கு ‘ஸ்ட்ரீட் வியூ’ வசதி