Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்1000 பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பும் யாஹூ!

    1000 பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பும் யாஹூ!

     யாஹூ (yahoo) நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 1000 பணியாளர்களை இந்த வாரத் தொடக்கத்தில் பணிநீக்கம் செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

    உலகளவில் முக்கிய நிறுவனங்களாக பார்க்கப்படும் அமேசான், மைக்ரோசாஃப்ட், ட்விட்டர், ஸ்விக்கி, மெட்டா  போன்ற நிறுவனங்கள் சமீபகாலமாக தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    மேலும், பல நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்தன. வரவுள்ள பணவீக்கத்தை எதிர்கொள்ளவே நிறுவனங்கள் இந்த முடிவை எடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. 

    இந்நிலையில், யாஹூ (yahoo) நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 1000 பணியாளர்களை இந்த வாரத் தொடக்கத்தில் பணிநீக்கம் செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இது அந்நிறுவனத்தின் தற்போதைய பணியாளர்களில் 12 சதவிகிதமாகும். விளம்பர தொழில்நுட்பப் பிரிவை மறுகட்டமைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

    முன்னதாக, ஜூம் செயலியின் 1,300 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    இந்தியா vs ஆஸ்திரேலியா: முன்னிலையில் இந்தியா.. இரண்டாம் இன்னிங்ஸ் தொடக்கம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....