Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுவிடுதி உணவில் புழு; பாரதியார் பல்கலைக்கழக மாணவிகள் போராட்டம் 

    விடுதி உணவில் புழு; பாரதியார் பல்கலைக்கழக மாணவிகள் போராட்டம் 

    கோவை பாரதியார் பல்கலைக்கழக விடுதியில் வழங்கப்பட்ட உணவில் புழு இருந்ததாகக் கூறி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். 

    இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 29) மாணவிகளுக்கு வழங்கப்பட்ட உணவில் புழு இருந்ததாகப் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, இன்று (ஆகஸ்ட் 30) காலை 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் பல்கலைக்கழக வளாகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    மாணவிகள் அப்போராட்டத்தில் தரமற்ற உணவு, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

    இத்தகவல் அறிந்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பேரூர் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜ பாண்டியன் மற்றும் காவல்துறையினர் மாணவிகளுடன் பேச்சு வார்த்தை மேற்கொண்டனர். மேலும்,

    பல்கலைக்கழக அதிகாரிகளும் மாணவிகளிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    மருத்துவமனை வளாகத்தில் பாம்பு; அலறியடித்து ஓடிய பொதுமக்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....