கேரள மாநிலத்தில் குழிமந்தி பிரியாணியை சாப்பிட்ட பின் 20 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் காசர்காடு பகுதியை சேர்ந்தவர், அஞ்சு ஸ்ரீபார்வதி. இவருக்கு வயது 20. இவர் உணவகம் ஒன்றில் குழிமந்தி பிரியாணியை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார்.
இந்த உணவை சாப்பிட்டப் பின் அவரது உடல்நிலை பாதிப்படைந்துள்ளது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவர் கடந்த 31-ஆம் தேதி உயிரிழந்தார்.
இது குறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது உடல் கூறாய்வு முடிவுகளுக்காகக் காத்திருப்பதாகவும், முடிவு வெளியானதும் வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் கேரளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அஞ்சு, பிறகு கர்நாடகத்தின் மங்களூருவில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இது குறித்து விசாரணை நடத்த கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். உணவுக் கட்டுப்பாட்டுத் துறையினர் இது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுமாறு கேட்டுக் கொண்டார்.
இதற்கு முன்னதாக, கேரளத்தில் மந்தி பிரியாணி உண்டு செவிலியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், அதே உணவகத்தில் சாப்பிட்ட 21 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
‘இந்த கார் வேண்டாம்’ – திருமணத்தை நிறுத்திய பேராசிரியர்..