கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா மரணத்தில், அறுவை சிகிச்சை செய்ததில் எந்த தவறும் இல்லை, மருத்துவரின் கவனக்குறைவு தான் காரணம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
சென்னை எக்மோரில் உள்ள கண் மருத்துவமனையை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் ஆய்வு செய்தார்.
பின் பேட்டி அளித்தவர்,
செப்டம்பர் தொடங்கி டிசம்பர் முதல் வாரம் வரையிலும் மெட்ராஸ் ஐ என்று சொல்லக்கூடிய கண் நோய் பரவல் தொடர்ச்சியாக இருந்து வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டும் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாளிலிருந்து செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து மெட்ராஸ் ஐ கண் பாதிப்பு கூடுதலாகி வருகிறது.
23-ஆம் தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அறுவை சிகிச்சை நிபுணர்கள் பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அன்றே வெளியிடப்படும்.
23 ஆம் தேதி 36 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில, மாவட்ட மருத்துவமனைகள் வட்டார மருத்துவமனைகளில் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கூட்டரங்கில் காலை 10 மணிக்கு தொடங்கி கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
சென்னையில் கண் நோய்க்கான மருத்துவ மையங்கள் அரசின் சார்பில் 10 இடங்கள் இருக்கிறது.எழும்பூர் கண் மருத்துவமனை, ஸ்டான்லி, கீழ்பாக்கம் மருத்துவமனை, ஓமந்தூரார் உள்ளிட்ட பத்து இடங்களில் கண் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது இந்த 10 இடங்களில் நாளொன்றுக்கு 80 -100 பேர் சிகிச்சைக்கு வருகிறார்கள்.
தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு மெட்ராஸ் ஐ பாதிக்கப்பட்டு 4000 முதல் 4500 வரை சிகிச்சைக்கு வருகிறார்கள்.பிரியா மரணம் தொடர்பான கேள்விக்கு – மருத்துவர்களின் சிகிச்சையில் எந்த குறைவும் இல்லை, மருத்துவரின் கவனக்குறைவு தான் காரணம் என தெரிவித்தார்.
மேலும் மருத்துவர்களின் பெயரில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆனால் கொலை குற்றமாக்க கூடாது என்று மருத்துவர்களே தெரிவிக்கிறார்கள் என கூறினார். கண் மருத்துவத்தைப் பொறுத்தவரையில் போதுமான மருந்துகள் கை இருப்பில் உள்ளது.
எழும்பூர் கண் மருத்துவமனைக்கு தினமும் 600 முதல் 700 நோயாளிகள் மெட்ராஸ் ஐ மட்டுமல்லாது வேறு கண் பாதிப்பு நோய்களுக்கு சிகிச்சை பெறுவதற்கு வருகிறார்கள். வரக்கூடிய நோயாளிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 90 மருத்துவமனைகளிலும் இது போன்ற விழிப்புணர்வு பதாகைகள் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் அனைத்து மருத்துவமனைகளிலும் வைக்கப்படும்.
மெட்ராஸ் ஐ பாதிப்பு குறித்து அச்சப்பட வேண்டிய அவசியமில்லை, நிச்சயமாக பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம், மூன்று, நான்கு நாட்கள் மட்டுமே கூடுதல் பாதிப்பு ஏற்படுத்தும். வைரஸ் தாக்குதலில் மூலமாக மெட்ராஸ் ஐ பாதிப்பை ஏற்படுகிறது .
இந்த நோய் கண்ணில் உறுத்தல் மூலமாகவும், சிவப்பு நிறமாக கண் மாறுதல், உள்ளிட்டவை ஏற்படுதல் மூலமாக கண்டறியப்படுகிறது.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்களை கையினால் தொடக்கூடாது. அப்படி தொட்டு விட்டு அருகே இருப்பவர்களை தொட்டால் அவர்களுக்கும் இந்த நோய் பரவும்.
இது எளிதில் பரவக்கூடிய நோய் பாதிப்பாகும். இதுவரையும் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் 1.5 லட்சம் பேர் வரை மெட்ராஸ் ஐ பாதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது .ஆனால் தற்போது வரையிலும் ஒருவருக்கு கூட கண்பார்வை இழப்பு ஏற்படவில்லை.