Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகள்ளக் காதலனுக்காக கணவனையே வாழைக்கு உரமாக்கிய மனைவி!

    கள்ளக் காதலனுக்காக கணவனையே வாழைக்கு உரமாக்கிய மனைவி!

    கள்ளக்காதலை கண்டித்த கணவனை கொன்று வாழைக்கு உரமாக்கிய மனைவியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

    கடலூர் மாவட்டம், நடுவீரப்பட்டு அடுத்துள்ள கிராமத்தில் வசித்து வந்தவர் கி. அய்யர் என்ற ராஜசேகர். இவருக்கு வயது 47 ஆகும். ராஜசேகர் விவசாயம் செய்து வந்துள்ளார். ராஜசேகர் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு தனது சகோதரியின் மகள் விஜயலஷ்மி என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். ராஜசேகருக்கும் அவரது மனைவி விஜயலஷ்மிக்கும் இடையே அடிக்கடி தகராறு வருவது வழக்கமாக இருந்துள்ளது. இதன் காரணமாக ராஜசேகர் வெளியூர் செல்வத்தையும் வழக்கமாக்கி வந்துள்ளார். 

    இந்நிலையில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு, வீட்டை விட்டுச் சென்ற ராஜசேகர் வீடு திரும்பாமல் இருந்துள்ளார். ராஜசேகர் குறித்த தகவல் ஏதும் தெரியாத நிலையில், விஜயலஷ்மியின் தம்பியான சிவக்குமார் விஜயலஷ்மியை விசாரித்துள்ளார். அப்போது விஜயலஷ்மி, தனது கணவர் ராஜசேகரை கொலை செய்துவிட்டு வாழைத் தோப்பில் புதைத்துவிட்டதாக கூறி சிவகுமாருக்கு அதிர்ச்சி அளித்துள்ளார். 

    இதுகுறித்து, தகவலறிந்த பண்ருட்டி சரக துணை கண்காணிப்பாளர் சபியுல்லா, நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளர் அசோகன் ஆகியோர் வருவாய்த்துறையினருடன் சென்று வாழைத் தோட்டத்தை பார்வையிட்டுள்ளனர். பின்னர், விஜயலஷ்மியை அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது விஜயலஷ்மி, ராஜசேகர் அடிக்கடி சண்டை போட்டுவிட்டு வெளியூர் சென்று விடுவார் என்றும் இதனிடையே, அதே பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். 

    மேலும் விஜயலஷ்மி, இதனை வைத்துதான் கணவர் ராஜசேகர், தன்னை கண்டித்து வந்ததாகவும் கடந்த 9 மாதத்திற்கு முன்னர் ஏற்பட்ட பிரச்சனையின் போது, தானும் மோகனும் சேர்ந்து ராஜசேகரை கொலை செய்ததாகவும் பின்பு, அவரது உடலை வாழைத் தோப்பில் புதைத்தாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தனது தம்பி சிவக்குமார், ராஜசேகர் மாயமானது குறித்து கேள்வி எழுப்பி வந்ததால் உண்மையை கூறி விட்டதாகவும் விஜயலஷ்மி தெரிவித்துள்ளார். 

    இதையடுத்து ராஜசேகரின் சகோதரர், கி. ராமசாமி என்பர் அளித்த புகாரின் அடிப்படையில் நடுவீரப்பட்டு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, விஜயலஷ்மியை நேற்று கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில், முக்கிய குற்றவாளியான கள்ளக்காதலன் மோகனை காவல் துறையினர் தேடி வருகின்றனர். 

    கள்ளக் காதலுக்காக கணவனையே கொன்று, வாழைத்த தோப்பில் புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    அசத்திய குஜராத் டைட்டன்ஸ்; ஆரவாரமில்லாமல் நடந்த இறுதிப்போட்டி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....