நியூசிலாந்து, கெர்மாடெக் தீவு அருகே இன்று காலை ரிக்டர் அளவுகோலில் 7.1 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நியூசிலாந்தின் வடக்கே உள்ள கெர்மாடெக் தீவு அருகே இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆகப் பதிவாகி உள்ளது.
மேலும்,இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடலுக்கு அடியில் 10 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தாலும், 300 கிமீ சுற்றளவுவிற்கு மக்கள் யாரும் வசிக்காத இந்த தீவின் கரையோரபகுதிகளில் அபாயகரமான சுனாமி அலைகள் ஏற்படக் கூடும் என எச்சரித்துள்ளது.
முன்னதாக, புதன்கிழமை வெலிங்டன் அருகே ரிக்டர் அளவில் 6.1 ஆக நிலநடுக்கம் உணரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்தை சந்தித்த கிரிக்கெட் பிரபலம்; நெகிழ்ச்சியான பதிவு..