Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்‘நேரம் வரும்போது அதிமுக அலுவலகம் செல்வேன்’ – ஓபிஎஸ்-வுடன் கைகோர்க்க தயாராகும் சசிகலா

    ‘நேரம் வரும்போது அதிமுக அலுவலகம் செல்வேன்’ – ஓபிஎஸ்-வுடன் கைகோர்க்க தயாராகும் சசிகலா

    நேரம் வரும் போது கட்சி அலுவலகத்துக்கு செல்வேன் என்று வி.கே சசிகலா தெரிவித்துள்ளார். 

    நேற்று, தஞ்சை அருளானந்த நகரில் சசிகலாவின் வீட்டின் முன்பு வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் உருவ படத்துக்கு மரியாதை செலுத்திவிட்டு செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது:

    அண்ணாவின் பாதையில் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அண்ணாவின் பிள்ளைகள் அனைவரும் ஒன்றாக இணைந்து அ.தி.மு.க-வை வெற்றியின் பாதைக்கு அழைத்துச் செல்வோம்.

    இதையும் படிங்க: ‘எடப்பாடி தலைமையை நிராகரிக்கிறார்கள்’ – ஓ.பி.எஸ்-க்கு ஆதரவாக களமிறங்கிய பண்ருட்டி ராமசந்திரன்

    நேரம் வரும்போது கட்சி அலுவலகத்துக்குச் செல்வேன். ஓ.பி.எஸ்-ஸும் நாங்களும் ஒன்றாகத்தான் இருக்கிறோம். தி.மு.க அரசு சொன்னதை எதுவும் செய்யவில்லை. என நான் போகும் இடங்களில் மக்கள் தெரிவிக்கின்றனர். ஏழை எளிய மக்களுக்காக அம்மா கொண்டுவந்த பல நல்ல திட்டங்களை தி.மு.க அரசு நிறுத்துவது நல்லதல்ல. 

    அரசாங்கத்தில் நிறைய தவறுகள் நடக்கின்றன. அவற்றை அரசு சரிசெய்ய வேண்டும். முன்னாள் அ.தி.மு.க அமைச்சர்கள் மீது நடத்தப்படும் சோதனை குறித்து வெளியே தெரிந்த பிறகே பேச வேண்டும், நாமாக எதையும் சொல்லக்கூடாது. அ.தி.மு.க-வுக்கு நிச்சயமாக தலைமை ஏற்பேன், அனைவரையும் ஒன்றிணைப்பேன். வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் நல்ல வெற்றியைப் பெறுவோம்.

    இவ்வாறு அவர் பேசியுள்ளார். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....