Monday, April 29, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்அஜித்குமார் புகைப்படங்களால் குஷியான ரசிகர்கள்.....ஒருவேளை இருக்குமோ?

    அஜித்குமார் புகைப்படங்களால் குஷியான ரசிகர்கள்…..ஒருவேளை இருக்குமோ?

    வலிமை திரைப்படத்தைப் போன்று துணிவு திரைப்படத்திலும் பைக் ஸ்டண்ட் காட்சிகள் இருக்கும் என ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

    தென்னிந்திய நடிகர்களுள் மிக முக்கியமான ஒருவர், அஜித்குமார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளிவந்த வலிமை திரைப்படமானது கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆயினும் வசூலில் பெரும் வேட்டையை நிகழ்த்தியது. இந்நிலையில், வலிமை திரைப்படத்தை தொடர்ந்து அஜித்குமார் மீண்டும் போனி கபூர் தயாரித்து எச்.வினோத் இயக்கும் திரைப்படத்தில் நடித்துவருகிறார். 

    இத்திரைப்படத்திற்கு துணிவு என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்காக அஜித்குமார் இருக்கும் தோரனை அஜித் ரசிகர்களை மட்டும் இன்றி, அனைத்து தமிழ் திரையுலக ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. தற்போது, இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முழுவதுமாக முடிவடைந்துள்ளது. பொங்கலுக்கு துணிவு திரைப்படம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

    அஜித்குமார் தனது பைக்குகளுடன் வலம் வரும் புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்தில் இருந்தே அஜித்குமார் அவ்வபோது பைக்-ரைடு சென்றுவருகிறார். லடாக் பகுதியில் சமீபத்தில் இவர் சென்றது பெரும் பேசுபொருளாய் ஆனது. இந்நிலையில், தற்போது மேலும் பல புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

    இந்த புகைப்படங்களால் துணிவு திரைப்படத்தில் நிச்சயமாக ஒரு பைக் ஸ்டண்ட் காட்சி இருக்கும் என்று ரசிகர்கள் எண்ணுகின்றனர். வலிமை திரைப்படத்தில் இடம்பெற்ற பைக் ஸ்டண்ட் காட்சிகள் ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது. 

    இதையும் படிங்க: மாணவர்களின் வழிகாட்டி அப்துல் கலாமின் 91-வது பிறந்தநாள்-குடும்பத்தினர் மரியாதை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....