அவருக்கு இருப்பது கிரிக்கெட் மூளை மட்டுமல்ல, அதையும் தாண்டியது என அஸ்வின் குறித்து ரவீந்திர ஜடேஜா பேசியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாட வந்த ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரை விளையாடி முடித்துள்ளது. இத்தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றிப்பெற்றது.
அகமதாபாத்தில் நடைபெற்ற கடைசி டெஸ் டிரா ஆனது. ஆமதாபாத் டெஸ்டில் சதமடித்த விராட் கோலி, ஆட்ட நாயகனாகத் தேர்வானார். அஸ்வின், ஜடேஜா ஆகிய இருவருக்கும் தொடர் நாயகன் விருது பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சக கிரிக்கெட் வீரர் அஸ்வின் குறித்து ரவீந்திர ஜடேஜா பேசியுள்ளது கிரிக்கெட் ரசிகர்களின் ரசனைக்கு உள்ளாகியுள்ளது.
அவர் தெரிவித்துள்ளதாவது;
அஸ்வினுடன் இத்தனை ஆண்டு காலம் இணைந்து பந்து வீசுவது மிகவும் மகிழ்ச்சி. நான் திணறும்போதெல்லாம், இக்கட்டான சூழலில் இருக்கும் போதெல்லாம், எப்படி ஃபீல்டிங் நிறுத்த வேண்டும், எந்த பேட்ஸ்மேனுக்கு எப்படி பந்துவீச வேண்டும் என்று அறிவுரை கூறிக்கொண்டே இருப்பார்.
அவருக்கு இருப்பது கிரிக்கெட் மூளை மட்டுமல்ல, அதையும் தாண்டியது. கிரிக்கெட் தாண்டி பலவற்றை பேசுவார். எங்களுக்கு பெயரே தெரியாத அணியை பற்றி எல்லாம் பேசுவார். உலகில் நடந்த அனைத்து கிரிக்கெட் சீரிஸ் பற்றியும் இவருக்கு தெரியும். கிரிக்கெட் மட்டுமல்ல அனைத்தையும் பற்றி தெரிந்து வைத்திருப்பார்.
இவ்வாறு ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.
ஓடிடியில் பதான் எப்போது? வெளிவந்த தகவல்..