Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுநிரம்பி வழியும் மேட்டூர் அணை 

    நிரம்பி வழியும் மேட்டூர் அணை 

    இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.75 அடியாக உள்ளது.
    கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பி வருகிறது. இதனால், அணைகளின் பாதுகாப்பு கருதி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    காவிரி ஆற்றுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து உள்ளதால், மேட்டூர்
    அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன்காரணமாக ஜூலை 16-ம் தேதி
    மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதையடுத்து அன்றுகாலை 11 மணி அளவில் 16 கண் மதகு வழியே தண்ணீர் திறக்கப்பட்டது.
    இதைத்தொடர்ந்து இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 120.75
    அடியாகவும் நீர் இருப்பு 94.67 டிஎம்சி ஆகவும் இருந்தது. மேட்டூர் அணைக்கு
    1,29,403 கன அடி வீதம் நீர் வந்துக் கொண்டிருக்கிறது. நீர் மின் நிலையங்கள்
    வழியாக 23,000 கன அடி நீரும், உபரி நீர் போக்கி வழியாக 1,10,000 கன அடி
    நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கன அடி
    நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
    மேட்டூர் அணையின் 16 கண் மதகு வழியே ஆர்ப்பரித்து செல்லும் தண்ணீரை காண
    பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து செல்கின்றனர்.
    முன்னதாக, காவிரி கரையோரங்களில் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதிகளில் காவல் துறையினரும் வருவாய்த் துறையினரும் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....