Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகணவன் கண்முன்னே மனைவியிடம் சில்மிஷம் செய்த நபர் போலீஸா? வைரல் விடியோவால் பரபரப்பு...

    கணவன் கண்முன்னே மனைவியிடம் சில்மிஷம் செய்த நபர் போலீஸா? வைரல் விடியோவால் பரபரப்பு…

    அரசு பேருந்தில் பெண்மணியிடம் தவறாக ஒருவர் நடந்துக்கொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னையில் அரசு பேருந்தில் தனது கணவருடன் பெண்மணி ஒருவர் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது, அந்த பெண்மணி இருக்கைக்கு பின்னிருக்கையில் அமர்ந்து கொண்ட நபர் அப்பெண்ணை சீண்டியுள்ளார். இதனால் அப்பெண் அதிர்ச்சியடைந்து தன் கணவரிடம் இதுபற்றி கூறியுள்ளார். 

    உடனே, கணவர் அந்த நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட, அந்த நபர் ‘நான் போலீஸ்காரன்’ என திமிருடன் பதிலளித்துள்ளார். மேலும், இச்சம்பவத்தை பேருந்து ஓட்டுநரோ, நடத்துநரோ கண்டுகொள்ளவில்லை. 

    இந்த நிகழ்வை அந்த பேருந்தில் பயணம் மேற்கொண்ட யாரோ ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து நெட்டிசன்கள் அந்த பெண்மணிக்கு உரிய நீதி கிடைக்க வேண்டுமென கருத்து தெரிவித்து வருகின்றனர். 

    இதையும் படிங்க:உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் கவலைக்கிடம்; மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....