Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமதுபானக் கடையை அடித்து நொறுக்கிய பெண்கள்; உத்தரபிரதேசத்தில் பரபரப்பு!

    மதுபானக் கடையை அடித்து நொறுக்கிய பெண்கள்; உத்தரபிரதேசத்தில் பரபரப்பு!

    உத்தரபிரதேச மாநிலத்தில் மதுபானக் கடையை பெண்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    உத்தரபிரதேச மாநிலம், சண்டோலி என்ற பகுதியில் மதுபானம் குடித்த தகராறில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அவ்வூர் கிராம மக்கள், அங்கு இருக்கும் மதுபானக் கடையை மூடக்கோரி போராட்டம் நடத்தினர். 

    இந்தப் போராட்டத்தில் கிராம மக்கள் திடீரென மதுபானக் கடைக்குள் நுழைந்து, அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபான பாட்டில்களை சாலையில் தூக்கி வீசி எரிந்தனர். கடைக்குள் சென்று பொருட்களை அடித்து நொறுக்கியதோடு அங்கு பணிபுரிந்து வந்த ஊழியர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. 

    இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இதனிடையே மக்கள் மதுபானக் கடையை அடித்து நொறுக்கியபோது, அங்கிருந்த பணம் காணாமல் சென்றதாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

    இந்தியா vs ஆஸ்திரேலியா: முன்னிலையில் இந்தியா.. இரண்டாம் இன்னிங்ஸ் தொடக்கம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....