வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவினரை கட்டியணைத்து ராகுல் காந்தி தனது மகிழ்ச்சியினை தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தற்போது பாரத் ஜோடோ யாத்திரை (இந்திய ஒற்றுமை பயணம்) என்ற ஒன்றை கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை தொடங்கியுள்ளார். இதன் நோக்கம் என்னவெனில் இந்தியாவை இணைக்க வேண்டும் என்பதே ஆகும். இந்த திட்டமானது, கடந்த புதன் அன்று துவங்கப்பட்டது.
ராகுல் காந்தியின் இந்த பயணம் 150 நாட்களுக்கு மேற்கொள்ளப்பட இருக்கிறது. அதில் மூன்றாம் நாளாக இன்று காலை நாகர்கோவிலில் இருந்து தனது நடைபயணத்தை துவங்கினார்.
இந்த பயணத்தில் பலர் ராகுல் காந்தியை தொடர்ந்து சந்தித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் இன்று வழியில் அழகிய மண்டபம் பகுதியினை கடந்த போது பிரபல சமையல் யூடியூப் சேனல் குழுவினர் அவரை சந்தித்து ஒற்றுமை பயணத்திற்காக வாழ்த்து தெரிவித்தனர். அப்போது அவர்களை கட்டியணைத்து ராகுல் காந்தி தனது மகிழ்ச்சியினை தெரிவித்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.