விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள டிஎஸ்பி திரைப்படம் டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி திரைக்கு வர காத்திருக்கும் திரைப்படம்தான், டிஎஸ்பி. இத்திரைப்படத்தை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா போன்ற திரைப்படங்களை இயக்கிய பொன்ராம்தான் இத்திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற திரைப்படங்கள் மாபெரும் ஹிட் அடிக்க, சீமராஜா எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதேசமயம், விஜய்சேதுபதி நடிப்பில் வெளிவந்த கடைசி விவசாயி, விக்ரம், மாமனிதன் போன்ற திரைப்படங்கள் பெரும் ஹிட் அடித்தது.
இப்படியாக சூழல்கள் இருக்க, இவர்கள் கூட்டணியில் உருவாகியிருக்கும் டிஎஸ்பி திரைப்படம் எப்படியிருக்கப் போகிறதென்ற ஆவல் ரசிகர்களிடத்தில் தொற்றிக்கொண்டுள்ளது. இத்திரைப்படத்தில் இருந்து வெளிவந்த போஸ்டரும், ‘நல்லா இரும்மா’ என்ற பாடலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், டிஎஸ்பி திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. டி.இமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் திரைப்படத்தை கைப்பற்றியது யார்? மாஸ்டர் செய்த மாயத்தை வாரிசு செய்யுமா?