நடிகர் விஐய் பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்துள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்தான், வாரிசு. ராஷ்மிகா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், குஷ்பு, ஷ்யாம் உட்பட பெரும் நட்சத்திர பட்டாளங்களே நடித்திருக்கும் இத்திரைப்படத்தை, பிரபல இயக்குநர் வம்சி இயக்குகிறார். தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார்.
வாரிசு திரைப்படம் வருகிற பொங்கலன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, திரைப்பட பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தமன் இசையில் உருவாகிவரும், வாரிசு திரைப்படத்திலிருந்து சமீபத்தில் வெளிவந்த ‘ரஞ்சிதமே’ மற்றும் ‘தீ தளபதி’ பாடல்கள் யூடியூப் தளத்திலும், ரீல்ஸ்களிலும் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளது.
இந்நிலையில், பனையூரில் உள்ள அலுவலகத்தில் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்தது. அதன்படியே, தற்போது நடிகர் விஐய் பனையூரில் உள்ள அலுவலகத்தில் நிர்வாகிகளை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பில் அரியலூர், பெரம்பலூர் போன்ற மாவட்டங்களின் நிர்வாகிகள் மட்டுமே இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டதாகவும், மக்கள் இயக்க செயல்பாடுகள் குறித்த விவாதிப்பு நடைபெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலைச்சர் ரங்கசாமி குறித்து ஸ்டாலின் பேசியது அரைவேக்காட்டுத்தனமான செயல்; அதிமுக அன்பழகன்