Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்மதுரை ஆதீனத்தின் பேச்சுக்கு தக்க பதிலடி கொடுக்கும் விஜய் ரசிகர்கள்!

    மதுரை ஆதீனத்தின் பேச்சுக்கு தக்க பதிலடி கொடுக்கும் விஜய் ரசிகர்கள்!

    மதுரை ஆதீனம் மடத்தின் சொத்துக்களை கொள்ளையடிக்க திட்டம் போடுறீங்களேயப்பா! நீங்களாம் தளபதியைப் பத்தி பேசலாமா தப்பா? என்று விஜய் ரசிகர்கள் மதுரை ஆதீனத்தைக் கண்டித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர். வீண் விளம்பரத்திற்காக பிதற்றுவதை நிறுத்து எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

    நடிகர் விஜய் நடித்த படங்களை பார்க்க வேண்டாம் என மதுரை ஆதீனம் பேசியிருந்த நிலையில், அவரை கண்டித்து மதுரை விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

    மதுரை ஆதீனம் சமீப காலமாக பேசி வரும் கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வருகிறது. அறநிலையத்துறையை கலைக்க வேண்டும் என்றும் சமீபகாலமாக பேசி வருகிறார் மதுரை ஆதினம். தற்போது நடிகர் விஜய் குறித்து அவர் தெரிவித்த கருத்தும் புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன.

    மதுரையில் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று நடைபெற்ற துறவியர் மாநாட்டு பொதுக்கூட்டத்தில் பேசிய மதுரை ஆதீனம், “பக்தர்கள் இந்து சமய அறநிலையத்துறை கோவில் உண்டியல்களில் பணம் போடாதீர்கள் என்றார். திராவிட பாரம்பரியம் என கூறுகிறார்கள். ஆனால் விபூதி பூச மறுக்கிறார்கள். விபூதியை கீழே கொட்டுகிறார்கள் என்றார்.

    நடராஜ சாமி, முருகன் உள்ளிட்ட சாமிகளை கேவலமாக பேசுகின்றனர். நடிகர் விஜய் நம்ம விநாயகர் கடவுளை பற்றி குறைத்து பேசுகிறார். அவர் நடித்த படத்தை பார்காதீர்கள்” என்றும் கூறினார். மதுரை ஆதீனத்தின் இப்பேச்சுக்கு விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    ஆதீனத்தின் இந்த பேச்சு விஜய் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக மதுரை வடக்கு மாவட்ட இளைஞரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாநகர் பகுதிகளில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

    அதில், “எச்சரிக்கை! மதுரை ஆதினம் மடத்தின் சொத்துக்களை கொள்ளையடிக்க திட்டம் போடுறீங்களேயப்பா! நீங்களாம் தளபதியைப் பத்தி பேசலாமா தப்பா?”; “வீண் விளம்பரத்திற்காக பிதற்றுவதை நிறுத்து. எங்களுக்கு ஜாதி மதம் ஏதுமில்லை. தளபதி மேல் மக்கள் கொண்ட அன்புக்கு வானமே எல்லை” என்ற வாசகங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன.

    சாதி விட்டு சாதி திருமணம்; தீர்ப்பு வந்த கண்ணகி மற்றும் முருகேசன் ஆணவக்கொலை வழக்கு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....