Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்'என் இன்னொரு அம்மா' - மாமியாருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விக்னேஷ் சிவன்!

    ‘என் இன்னொரு அம்மா’ – மாமியாருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விக்னேஷ் சிவன்!

    விக்னேஷ் சிவன் நயன்தாராவின் அம்மாவுக்கு தெரிவித்துள்ள பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

    விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் முறையே இயக்கத்திலும் நடிப்பிலும் உச்சத்தை அடைந்து வருகின்றனர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. சமீபத்தில் வந்த அறிவிப்பு ஒன்று விக்னேஷ் சிவனை உச்ச இயக்குனர் என்று அழைப்பதில் தவறில்லை என்றே தோன்ற வைத்துள்ளது. 

    ஆம்! அஜித்குமார் அவர்களின் 62 வது திரைப்படத்தை விக்னேஷ் சிவன்தான் இயக்குகிறார் என்ற அறிவிப்புதான், விக்னேஷ் சிவனை உச்ச இயக்குனர் என்று அழைப்பதில் தவறில்லை என்ற எண்ணத்தை விதைத்துள்ளது. என்னை அறிந்தால் திரைப்படத்திலும், வலிமை திரைப்படத்திலும் பாடலாசிரியராக பணியாற்றிய விக்னேஷ் சிவன், அஜித்குமார் அவர்களின் 62 வது திரைப்படத்தில் இயக்குனராக பணியாற்ற இருக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைப்பது அனைவரும் அறிந்ததே. விக்னேஷ் சிவனின் முன்னேற்றப் பாதை இப்படியாக இருக்கிறது. 

    லேடி சூப்பர் ஸ்டார் என்ற தகுதியான அடைமொழியுடன் வலம் வந்துக்கொண்டிருக்கும் நயன்தாராவிற்கு இருக்கும் ரசிக பட்டாளம் குறித்து எவரும் எவருக்கும் விளக்கத் தேவையில்லை என்ற ரீதியில்தான் நயன்தாராவின் மீதான ரசிகர்களின் அன்பு இருக்கிறது. திரைப்படத்திற்கு  திரைப்படம் நயன்தாராவின் வளர்ச்சியும் முன்னேற்றம் அடைந்துக் கொண்டிருக்கிறது. 

    மேலும், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். இதுவரையில் ரவுடி பிக்சர்ஸ் சார்பில் நெற்றிக்கண் திரைப்படமும் ராக்கி திரைப்படமும் வெளிவந்திருக்கிறது. கூழாங்கல் திரைப்படம் வெளிவர காத்திருக்கிறது. கனெக்ட், ஊர்க்குருவி போன்ற திரைப்படங்கள் உருவாகி வருகிறது. 

    இதையும் படிங்க: விக்ரம் அழைக்க, கார்த்தி மறுக்க, ஜெயம் ரவி ஏற்க….. அலப்பறையில் பொன்னியின் செல்வன் படக்குழு!

    இந்நிலையில், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் திருமணம் செய்தனர். இதைத்தொடர்ந்து, நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தாய்லாந்துக்கு சென்றனர். அப்போது இவர்கள் எடுத்த புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலாகின. இப்போது இருவரும் தங்களின் திரைப்படங்களில் பிஸியாக உள்ளனர். 

    இச்சமயத்தில், நயன்தாராவின் அம்மா நேற்று பிறந்தநாள் கொண்டாடினார். இதைத்தொடர்ந்து விக்னேஷ் சிவன், நயன்தாராவின் அம்மாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்தில், “ அன்புள்ள ஓமனகுரியன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நீங்கள் என் மற்றொரு தாய். நான் மிகவும் நேசிக்கும் பெண். தூய்மையான ஆன்மா, அழகான இதயம் கொண்டவர். நீங்கள் நல்ல ஆரோக்கியம், அமைதி, மகிழ்ச்சி மற்றும் நிறைய ஆசீர்வாதங்களுடன் வாழ கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

    விக்னேஷ் சிவனின் இந்த வாழ்த்து சமூகவலைதளத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....