விக்னேஷ்சிவன் – நயன்தாரா தம்பதியினர் குறித்து விக்னேஷ் சிவன் பெரியப்பா- பெரியம்மா கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் கடந்த ஜூன் 9-ம் தேதி திருமணம் செய்தனர். திருமணம் முடிந்தப்பின் ஹனிமூன் சென்றுவிட்டு இருவரும் தங்களது பணிகளில் பிஸியாகினர்.
நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினருக்கு நேற்று இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியானது. விக்னேஷ் சிவன் தனது சமூகவலைதள பக்கத்தில், “நயனும் நானும் அம்மா & அப்பாவாகிவிட்டோம். நாம் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் இரட்டை ஆண் குழந்தைகள். நமது பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள், அனைத்து நல்ல வெளிப்பாடுகளும் இணைந்து, நமக்கு 2 குழந்தைகளின் வடிவில் வந்துள்ளது. உங்கள் அனைவரின் ஆசிகளும் எங்களுக்கு வேண்டும்” என்று குறிப்பிட்டு இரு குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்தார்.
இதையும் படிங்க:தென்னாப்பிரிக்காவை சுருட்டிய இந்திய பந்துவீச்சாளர்கள்… தொடரை கைப்பற்றிய இந்தியா!
இருவரும் குழந்தைகளை தத்து எடுத்திருக்கலாம் என்று தகவல்கள் பரவ, வாடகைத்தாய் மூலம் இந்த குழந்தைகளை இவர்கள் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாரப்பூர்வமாக இது குறித்து எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை. மேலும், வாடகைத்தாய் முறையென்றால் பல சட்டங்கள் உள்ளது அதையெல்லாம் அவர்கள் பின்பற்றினார்களா என்ற கேள்விகளும் சமூகவலைதளத்தில் பரவின.
இதைத்தொடர்ந்து, நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் விதிமுறைகளின் படி குழந்தைகளை பெற்றார்களா? என்பது குறித்து
பொது சுகாதாரத்துறையின் சார்பில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதியிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.
இந்நிலையில், கல்யாணமாகி மூன்று, நான்கு மாதங்களில் குழந்தை பிறந்து என்றவுடன் எங்களால் வெளியில் தலைகாட்ட முடியவில்லை, என்னென்ன கேள்விகளையோ கேட்கிறார்கள் என்று விக்னேஷ் சிவனின் பெரியப்பா- பெரியம்மா கூறியுள்ளனர்.