தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தனது வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களை கண்டவர். தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர ஜோடியாக வலம் வருபவர்கள் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடி.
6 வருடங்களுக்கும் மேலாக இருவரும் காதலித்து வருகின்றனர். விஜய் சேதுபதி நடிப்பில ‘நானும் ரௌடிதான்’ படத்தின் போது இருவருக்கிடையே காதல் ஏற்பட்டது. இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவக்கி அதன்மூலம் பல படங்களை தயாரித்தும் விநியோகித்தும் வருகின்றனர்.
ஆறு வருடங்களுக்கும் மேலாக இவர்களது காதல் மிகவும் அழகாக தொடர்ந்து வருகிறது. இவர்கள் இருவரும் இணைந்து வெளியிட்டுவரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு என ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர்.
இன்ஸ்டாகிராமில் நயன்தாராவை செல்லம், கண்மணி என விக்னேஷ் சிவன் கொஞ்சுவதை ரசிகர்கள் மிகவும் வரவேற்று பின்னூட்டங்கள் இடுவர். என்னுடைய வாழ்க்கையின் வெற்றிக்கு இரண்டு பெண்கள் காரணம் என்றும் ஒருவர் தன்னுடைய அம்மா என்றும் மற்றொருவர் நயன்தாரா என்றும் விக்னேஷ் சிவன் தனது சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார்
சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்தே தயாரித்திருந்தனர். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி திருப்பதி, சீரடி உள்ளிட்ட கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
சமீபத்தில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் மோதிரம் மாற்றி எளிமையாக நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாக டிவி நிகழ்ச்சி ஒன்றில் நயன்தாரா தெரிவித்து இருந்தார். அதனை தொடர்ந்து, இவர்களின் திருமணம் எப்போது என்ற கேள்வி அவர்களது ரசிகர்கள் மத்தியில் எழுந்துவந்தது.
கோலிவுட்டின் நீண்ட எதிர்பார்ப்புகளில் ஒன்று இவர்களின் திருமணம் தான். இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக நீண்ட நாட்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன. தற்போது இருவரின் திருமண தேதி உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலின் படி, நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனை வரும் ஜூன் 9-ம் தேதி திருப்பதியில் வைத்து திருமணம் செய்து கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் இன்று திருமண இடத்தை முன்பதிவு செய்து கொள்கின்றனராம்.
இதுகுறித்து இருவரும் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அறியக் கூடியவையாக அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் அழகிய இடங்கள்; வாங்க பார்க்கலாம்!