Saturday, May 4, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்பிரபல எழுத்தாளர் பெயரில் பணமோசடி....

    பிரபல எழுத்தாளர் பெயரில் பணமோசடி….

    எழுத்தாளரும்‌ பிரபல நடிகருமான வேல.ராமமூர்த்தி, தன் பெயரில்‌ பணமோசடி நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். 

    எழுத்தாளாராகவும், தமிழத்திரையுலகின் நடிகராகவும் திகழ்ந்து வருபவர், எழுத்தாளர் வேல. ராமமூர்த்தி. இவர் “குற்றப்‌ பரம்பரை’ நாவல்‌ மூலம்‌ பிரபலமானார். சில திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.

    தற்போது, முழுநேர நடிகராக அசத்தி வரும் வேல.ராமமூர்த்தி. ‘கிடாரி’ படத்தில்‌ நடித்ததன் மூலம் பல தரப்பையும் கவர்ந்தார். தற்போது இவர் நடிப்பில் ‘பேட்டைகாளி’ என்ற இணையத்தொடர் வெளிவந்துக்கொண்டிருக்கிறது. இதிலும் இவரின் நடிப்பு சிறப்பாக உள்ளதாக பேசப்பட்டு வருகிறது.

    இந்நிலையில்‌, தன்‌ சமூக வலைதள பக்கத்தில்‌ ‘என்‌ பெயரில்‌ கணக்கு தொடங்கி சிலர்‌ பணத்தை பறிக்கும்‌ முயற்சியில்‌ ஈடுபட்டு வருகின்றனர்‌ என்று வேல.ராமமூர்த்தி தெரிவித்துள்ளார். மேலும், பேஸ்புக்‌, ட்விட்டர்‌, இன்ஸ்டாகிராம்‌ போன்ற தளங்களிலிருந்து என்‌ பெயரில்‌ நட்பு அழைப்பு வந்தாலோ, யாரும்‌ தொடர்புக்கொண்டாலோ அதை ஏற்றுக்கொள்ள வேண்டாம்‌’ என அவர் தெரிவித்துள்ளார்‌.

    போராடி வெற்றி பெற்ற போர்ச்சுகல்; ரொனால்டோ அரங்கேற்றிய சாதனை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....