உத்தரகண்ட் மாநிலத்தின் பித்தோராகர் பகுதியில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தேசிய நிலஅதிர்வு மையம் கூறுகையில்,
உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கமானது பித்தோராகரில் இருந்து 43 கி.மீட்டரில், 5 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக உணரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும், பொருள்சேதமோ ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.