இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் முகமது ஷமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச இருபது ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கபட்டது. இதையடுத்து ஆஸ்திரேலியா, தென்னாப்ரிக்கா அணிகளுக்கு எதிரான இருபது ஓவர் தொடர்களில் விளையாடும் இந்திய அணியையும் பிசிசிஐ அறிவித்தது.
இந்நிலையில், நாளை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இருபது ஓவர் போட்டிகள் தொடங்குகிறது. இந்தப் போட்டிக்காக ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தச் சுற்றுப்பயணமானது செப்டம்பர் 20-ல் தொடங்கி 25-ல் முடிவடைகிறது.
இதையும் படிங்க : கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்து பெற்ற 15 வயது சிறுவன் ! இந்தியாவின் அடுத்த பொக்கிஷமாகும் ‘பிரணவ்’
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி இடம் பெற்றார். ஆனால், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணியில் இருந்து முகமது ஷமி நீக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, முகமது ஷமிக்கு பதிலாக உமேஷ் யாதவ் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.