Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதொடங்கிய குரூப் 1 தேர்வு; 92 காலிப்பணியிடங்களுக்கு 3 லட்சம் பேர் விண்ணப்பம்

    தொடங்கிய குரூப் 1 தேர்வு; 92 காலிப்பணியிடங்களுக்கு 3 லட்சம் பேர் விண்ணப்பம்

    தமிழகம் முழுவதும் குரூப் 1 தேர்வு விரிவான பாதுகாப்புடன் தொடங்கியுள்ளது. 

    தமிழகம் முழுவதும் மூன்று படிநிலைகளைக் கொண்ட குரூப் 1 தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. தற்சமயம், இந்த தேர்வானது 38 மாவட்ட மையங்களில் நடைபெற்று வருகின்றன. காலை 9.30 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வானது இன்று நண்பகல் 12.30 மணி வரை நடைபெறவுள்ளது. 

    மேலும், இத்தேர்வை எழுத 3 லட்சத்து 22 ஆயிரத்து 414 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளுடனே இந்த வேலை நடைபெற்று வருவதாக தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

    முன்னதாக, காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிக்கை கடந்த ஜூலை 21-ஆம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து,  இந்தத் தேர்வை எழுத 3 லட்சத்து 22 ஆயிரத்து 416 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

    இந்த குரூப் 1 பிரிவில், துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர், வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் என மொத்தம் 92 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....