Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்இபிஎஸ் வெளியே, ஓபிஎஸ் உள்ளே.... நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்ட சட்டப்பேரவை

    இபிஎஸ் வெளியே, ஓபிஎஸ் உள்ளே…. நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்ட சட்டப்பேரவை

    இன்று நாள் முழுதும் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

    தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர் இன்று நடைபெற்றது. இந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் இராமநாதபுரம் இளைய மன்னர் திரு. நாகேந்திர குமரன் சேதுபதி, இந்திய விடுதலைப் போராளி அஞ்சலை பொன்னுசாமி அம்மாள், ஐக்கிய இராஜ்ஜியத்தின் இராணி இரண்டாம் எலிசபெத், மலேசிய இந்திய காங்கிரஸின் முன்னாள் தலைவர் துன் திரு. எஸ்.சாமிவேலு,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு. கோடியேரி பாலகிருஷ்ணன், உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் திரு. முலாயம் சிங், சட்டமன்றப் பேரவை முன்னாள் தலைவர் திரு. சேடப்பட்டி இரா.முத்தையா மற்றும் சட்டமன்றப் பேரவை முன்னாள் உறுப்பினர்கள் ஆகியோரது மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து, இன்று நாள் முழுதும் அவை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். மேலும், மீண்டும் சட்டப்பேரவை நாளை காலை 10 மணிக்கு கூடும் என அவர் அறிவித்தார். 

    அதிமுகவின் உள்கட்சி பிரச்சனை காரணமாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. ஆனால், ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் கூட்டத்தொடரில் பங்கேற்றனர். 

    இதையும் படிங்க: பெண்கள் கல்லூரிக்குள் சுவர் ஏறி குதித்த ஆண்கள் கல்லூரி மாணவர்கள்; வைரலான காட்சிகள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....