Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்திராவிட மாடல் ஆட்சி புதுச்சேரியில் அமையும் என்று ஸ்டாலின் கூறியதில் எந்தவித தவறும் இல்லை; நாராயணசாமி

    திராவிட மாடல் ஆட்சி புதுச்சேரியில் அமையும் என்று ஸ்டாலின் கூறியதில் எந்தவித தவறும் இல்லை; நாராயணசாமி

    புதுச்சேரி அரசு உடனடியாக சட்டமன்றத்தை கூட்டி ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அவசர சட்டம் இயற்ற வேண்டும் என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். புதுச்சேரியில் திராவிட மாடல் ஆட்சி அமையும் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதில் எந்த தவறும் இல்லை என தெரிவித்தார்.

    புதுச்சேரி எல்லையம்மன் கோவில் வீதியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான கோப்புகளை தமிழக ஆளுநருக்கு அரசு அனுப்பியும் இதுவரை ஆளுநர் எந்தவித முடிவும் எடுக்கவில்லை என்றும், புதுச்சேரியில் ஆன்லைன் சூதாட்டத்தை சில ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களே நடத்தி வருவதாகவும், இதனால் பல உயிர்கள் பலியாகி உள்ளதாகவும், எனவே உடனடியாக புதுச்சேரி அரசு சட்டமன்றத்தை கூட்டி ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அவசர சட்டம் இயற்ற வேண்டும் என கூறினார்.

    மேலும் இந்தியாவில் சண்டிகர் மாநிலத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும் மின்துறையை தனியார் மாயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடவில்லை, புதுச்சேரியில் மின்துறை தனியார் மயமாக்கலை தடுப்பதற்காக தேவைப்பட்டால் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர உள்ளதாககுறிப்பிட்ட நாராயணசாமி, நான் அரசியலில் இருப்பதற்காகவே அவ்வப்போது பேட்டி கொடுப்பதாக என் மீது புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் குற்றம்சாட்டி வருகிறார்.

    ஆனால் ஆறு முறை கட்சி மாறியவர் தான் நமச்சிவாயம் என்றும், அவர் தன்னை பற்றி விமர்சிக்க எந்த அருகதையும் இல்லை என்று குறிப்பிட்ட அவர் இனிமேல் அவர் தலைகீழாக நின்றாலும் புதுச்சேரியில் முதல்வர் கனவு பலிக்காது என்றும் தெரிவித்தார். மேலும் அவருக்கு நாவடக்கம் தேவை அவரைப் பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்தவன் தான் ஆனால் அதை நான் சொல்ல விரும்பவில்லை என்றார்.

    தொடர்ந்து பேசிய அவர், புதுச்சேரியில் கோவில், பள்ளிகள் அருகே ஏற்கனவே நிறைய மதுபான கடைகள் உள்ளது. தற்போது வருமானத்தை குறி வைத்து ரெஸ்டோ பார் என்ற பெயரில் குடியிருப்பு, கோவில், பள்ளிகள் அருகே திறக்கப்பட்டு வருகிறது. இதனால் புதுச்சேரியில் கலாச்சார சீரழிவை முதலமைச்சர் ரங்கசாமி ஏற்படுத்தி வருகிறார். எனவே உடனடியாக அவற்றை மூட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    புதுச்சேரியில் திராவிட மாடல் ஆட்சி அமையும் என்று தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் சொன்னதில் எந்தவித தவறும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், அந்தந்த கட்சியினரும் தனது ஆட்சி ஒரு மாநிலத்தில் மலர வேண்டும் என்று நினைப்பது நியாயம் தான் என்றார். மேலும் தமிழகத்தில் என்ன கூட்டணி தொடர்கிறதோ புதுச்சேரியில் அதே கூட்டணி தொடரும் என்றும் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.

    தமிழகத்தை போல் புதுச்சேரியிலும் விரைவில் திராவிட மாடல் ஆட்சி மலரும்; முதலமைச்சர் ஸ்டாலின்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....