வேலூரில் இன்று நடக்க உள்ள அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க தலைமைச் செயலாளர் இறையன்பு சாதரணமாக ரயில் ஏறி புறப்பட்டு சென்றார்.
கள ஆய்வில் முதல் அமைச்சர் திட்டத்தின் அரசுமுறை பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து வேலூருக்கு இன்று புறப்பட்டு சென்றார். அதன்படி, முதல்வரின் 2 நாள் பயணம் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களுக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக இன்று காலை 10.16 மணிக்கு சீரடி செல்லும் அதிவிரைவு ரயிலில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலுருந்து காட்பாடிக்கு புறப்பட்டார். முதல்வருடன், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் முதல்வரின் தனிச்செயலாளர்கள் உள்ளிட்டோரும் ரயிலில் பயணம் மேற்கொண்டனர்.
இந்நிலையில், இந்தப் பயணத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் துணிப்பையை தோளில் தொங்கவிட்டபடி மிகவும் எளிமையாக நடந்து சென்றார். இவர் இப்படி சாதரணமாக சென்றது காண்போரை கவர்ந்தது.
14 வருடங்களுக்குப் பிறகு விஜய்யுடன் நடிக்கும் பிரபல நடிகை – வெளிவந்த அறிவிப்பு!