‘தளபதி 67’ திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடிகர் விஷால் நடிக்கவுள்ளதாக வெளிவந்த தகவல்களுக்கு விஷால் விளக்கம் அளித்துள்ளார்.
மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இருவரும் விரைவில் ‘தளபதி 67’ படத்திற்காக இணையவுள்ளனர். மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் சறுக்கலை சந்தித்தது. அதேசமயம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் வெற்றியை சந்தித்தது.
இச்சூழலில்தான், ‘தளபதி 67’ திரைப்படம் குறித்த அறிவிப்பு டிசம்பர் மாதம் வெளியாகும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இதனால், ரசிகர்கள் பெரும் ஆனந்தத்தில் உள்ளனர். அதிகாரப்பூர்வ அறிவிப்பே வெளியாகாத நிலையில் ‘தளபதி 67’ திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு செல்வது திரையுலகினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து, சமீபத்தில் ‘தளபதி 67’ திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடிகர் விஷால் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்தது. இந்நிலையில், இது குறித்து நடிகர் விஷால் மனம் திறந்துள்ளார்.
அதன்படி, அவர் தெரிவித்துள்ளதாவது, ‘விஜய் 67 படத்திற்காக என்னிடம் லோகேஷ் பேசியது உண்மைதான். ஆனால், ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்கள் எனக்கு இருப்பதால் அதில் நடிக்க முடியவில்லை. அதே நேரத்தில் விஜய் படத்தை இயக்கி அதில் வில்லனாக நடிக்கும் ஆசை இருக்கிறது. அந்தப் படம் விரைவில் உருவாகும் என்று எதிர்பார்க்கிறேன்’ என்று விஷால் தெரிவித்துள்ளார்.
கோல்டன் குளோப் விருதில் ஆர்ஆர்ஆர்; உற்சாகத்தில் படக்குழு…