Wednesday, May 8, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு'ஒற்றை ஓநாய் தாக்குதல் முறை' கோவை கார் வெடி விபத்து விசாரணையில்.. போலீஸ் பகீர் தகவல்

    ‘ஒற்றை ஓநாய் தாக்குதல் முறை’ கோவை கார் வெடி விபத்து விசாரணையில்.. போலீஸ் பகீர் தகவல்

    கோவை மாவட்டம், டவுன் ஹால் பகுதியில் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே அக்டோபர் 23 ஆம் தேதி அதிகாலை அங்கிருந்த காரில் சிலிண்டர் வெடித்ததில் கார் முழுவதும் சேதமடைந்தது. மேலும் காரில் இருந்த உக்கடம் பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபீன் என்ற இளைஞர் உடல் கருகி பலியானார். 

    இவரின் வீட்டில் சோதனை செய்த போது வெடிகுண்டு தயாரிக்க தேவையான 75 கிலோ வெடி பொருட்கள் சிக்கின. இந்த சம்பவத்தில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

    இதுகுறித்தனான விசாரணை தற்போது தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. 

    இந்நிலையில், தமிழ்நாடு காவல்துறை நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    இந்த வெடிவிபத்து, தாக்குதல் என்றும், தீவிரவாத சிந்தனை கொண்டவர்கள் கையாளும் ஒற்றை ஓநாய் தாக்குதல் முறையை ஒத்திருப்பதும் தெரியவந்துள்ளது. ஒற்றை ஓநாய் முறை என்பது தீவிரவாத அமைப்பின் துணையின்றி தனியாக சித்தாந்த கொள்கைகளுக்காக தாக்குதல் நடத்தும்
    முறை ஆகும். 

    இந்த ஒற்றை ஓநாய் தாக்குதல்கள் ஐஸ் இஸ்லாமிய அரசு, அல் கொய்தா ஆகிய அமைப்புகளின் சித்தாந்தத்தில் உருவானவை என்பது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க:திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா – மலையில் ஏற கட்டுப்பாடுகளை விதித்த மாவட்ட ஆட்சியர்

    ஜமேஷா முபீன் 3 டிரம்களில் வெடிமருந்துகளுடன் ஆணி, கோலிகுண்டு உள்ளிட்டவற்றை காரில் வைத்துக்கொண்டு, காரை கோயில் முன்பாக நிறுத்தி சிலிண்டரில் இருந்து கேசை திறந்து விட்டு, பின் தற்கொலை படை தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகித்துள்ளனர்.

    இந்தச் சம்பவத்தை ஏற்படுத்தி கோயிலின் முன்பு பெரிய அளவில் பாதிப்பை  உருவாக்க முபீன் நினைத்திருந்திருக்கலாம் என்றும், இந்தச் சம்பவம் பெரிய பாதிப்பு இல்லாமல் போனதும் காவல்துறை நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

    ஜமேஷா முபீன் தனது நெருங்கிய உறவினர்களான அசாரூதீன் மற்றும் அப்சர்கான் ஆகியோருடன் கோனியம்மன் கோயில் உட்பட பல கோயில்களை சமீப காலமாக நோட்டமிட்டு இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை சேகரிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் ஜமேஷா முபீன் அவரது உறவினர்களான அசாருதீன் மற்றும் அப்சர் கான் ஆகியோர் காந்தி பார்க் பகுதியில் கேஸ் சிலிண்டர்கள் வாங்கியிருப்பதும், பழைய மார்க்கெட் பகுதியில் 3 இரும்பு ட்ரம்களை வாங்கி இருப்பதும் அம்பலமாகி உள்ளது. மேலும் இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை சேகரிக்கும் பணியிலும் காவல்துறை செயல்பட்டு வருகிறது.

    தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணையை தொடங்கும் முன்பே கோவை காவல்துறையினர் முக்கிய தகவல்களை விசாரணை செய்து சேகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    தேசிய புலனாய்வு அமைப்பு நடத்தும் சோதனையில் பல உண்மை தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: ஐ.நா. அமைப்பின் அலுவலக மொழிகளில் ஒன்றாக ஹிந்தி…கடும் முயற்சியில் இந்தியா!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....