கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளளார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஜூலை 12-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்தி கொண்டிருப்பதாக பதிவிட்டிருந்தார்.
இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் கூறியது:
“உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்.” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்திருக்கும் முதல்வருக்கு சி-டி ஸ்கேன் பரிசோதனை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்திருந்தனர். மேலும், இன்று மாலையே அவர் வீடு திரும்புவார் என்றும் தகவல்கள் வெளியானது.
இதனிடையே, இன்று சி-டி ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ள மருத்துவமனைக்கு சென்ற முதல்வர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் மருத்துவக் கண்காணிப்புக்காகவும் மருத்துவ பரிசோதனைக்காகவும் முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று; நலம் பெற அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து!