சென்னை: தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் மிக கனமழை, 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் கிழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
அடுத்த 24 மணி நேரத்துக்கு வட தமிழக மாவட்டங்களான நீலகிரி, கோயம்புத்தூர் ,திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ,திருச்சிராப்பள்ளி, கரூர், மதுரை, சிவகங்கை, ஈரோடு, சேலம், நாமக்கல் , கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரையில்,
அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் 9 செ.மீ , புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் 8 செ .மீ கரூர், திருவாரூர், தேனி, கோயம்புத்தூர் உள்ளிட்ட முக்கிய இடங்களில் 4 செ.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை ,
குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
லட்சத்தீவு பகுதிகள், கேரளா கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
இவ்வாறு, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
‘கைரேகைய பாருங்க’ நீட் தேர்வு குளறுபடியால் கோர்ட்டுக்கு போன மாணவி