10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு வருகிற மார்ச் முதல் வாரத்தில் நடத்த திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வை மார்ச் முதல் வாரத்தில் நடத்த திட்டமிட்டிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
மேலும், மார்ச் 6 முதல் 10 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்த நிலையில், இந்தச் செய்முறை தேர்வுகள் முன்கூட்டியே நடத்த முடிவு செய்யப்பட்டு இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
2023 ஆம் ஆண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த ஆண்டு பொதுத் தேர்வினை 8 லட்சம் பேர் எழுத உள்ளனர். 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு ஹால் டிக்கெட் ஜனவரி 4 ஆம் தேதி வெளியானது.
11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு வருகிற மார்ச் மாதம் 14 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அதேபோல், 10 வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் கணக்கெடுப்பு