சென்னை அரும்பாக்கத்தில் தமிழ் திரைப்பட பாடலாசிரியர் கபிலனின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
தமிழ் திரைப்படத்துறையில் பாடலாசிரியராக இருப்பவர், கபிலன். இவர் சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனி மார்க்கெட் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் மகள் தூரிகை. இவருக்கு வயது 28. எம்பிஏ படித்துள்ள இவர் எழுத்தாளர், ஆடை வடிவமைப்பாளர் என்று பன்முகத் திறமை கொண்டவர்.
இந்நிலையில் தூரிகை, வெள்ளிக்கிழமை மாலை வீட்டில் தனியாக இருக்கும்போது தூக்கிட்டு கொண்டதாக தெரிகிறது. இதைப் பார்த்த அவரது குடும்பத்தினர், தூரிகையை மீட்டு சாலிகிராமத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், தூரிகை ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக அரும்பாக்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனர்.
மேலும், முதல் கட்ட விசாரணையில், திருமணம் செய்துக் கொள்ளுமாறு பெற்றோர் வற்புறுத்தியதும், திருமணம் செய்ய மனமில்லாமல் தூரிகை இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக காவல்துறை மேலும் விசாரணை செய்து வருகின்றது. இச்சம்பவம் தமிழ் திரைப்படத்துறையினரிடமும், திரைப்பட ரசிகர்களிடத்தில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.