சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள ‘இராவண கோட்டம்’ படம் வருகிற மே-12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘மதயானைக்கூட்டம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி நல்ல பெயரை பெற்றவர் விக்ரம் சுகுமாரன். இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கியுள்ள படம்தான், ‘இராவண கோட்டம்’.
இப்படத்தில் நடிகர் சாந்தனு, நடிகை கயல் ஆனந்தி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு ஜஸ்டின் பிராபகரன் இசையமைத்துள்ளார். மேலும், இப்படத்தை கண்ணன் ரவி தயாரிக்க வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதி செய்துள்ளார்.
மதயானைக்கூட்டம் பெற்ற படத்தின் வரவேற்பு காரணமாக, இராவண கோட்டம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்பது ரசிகர்களிடையே உள்ளது. சமீபத்தில் இப்படத்தில் இருந்து வெளிவந்த ‘அத்தன பேர் மத்தியில’ பாடலும் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விதமாகவே ரசிகர்களிடத்தில் அமைந்துள்ளது.
இந்நிலையில், இராவண கோட்டம் படம் வருகிற மே-12 ஆம் தேதி உலகம் முழுதும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இப்படத்தின் டிரைலர் வெளிவந்து சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் லிங்குசாமிக்கு சிறைத் தண்டனை? – தீர்ப்பளித்த நீதிமன்றம்!