Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஉலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் ஆனார் சூர்யகுமார் யாதவ்! ஐசிசி டி20 கிரிக்கெட் தரவரிசையில் அசத்தல்

    உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் ஆனார் சூர்யகுமார் யாதவ்! ஐசிசி டி20 கிரிக்கெட் தரவரிசையில் அசத்தல்

    சர்வதேச இருபது ஓவர் தரவரிசையில் இந்திய அணி வீரர் சூர்யகுமார் யாதவ் முதலிடத்திற்கு முன்னேறினார்.

    சூர்யகுமார் யாதவ், தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உலக கோப்பையில் இந்திய அணியில் இடம்பெற்று விளையாடி வருகிறார். இந்திய அணியின் மிக முக்கியமான வீரராக இவர் வலம் வந்துக்கொண்டிருக்கிறார். 

    2021-ம் ஆண்டு மார்ச் மாதம் சர்வதேச இருபது ஓவர் போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் அறிமுகமானார். இதுவரையில் 37 ஆட்டங்களில் விளையாடி, 1 சதத்தையும், 11 அரைசதங்களையும் விளாசினார்.

    இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள தரவரிசைப்பட்டியலில் சூர்யகுமார் யாதவ் பேட்டர் பிரிவில் முதலிடம் பிடித்துள்ளார். இவர் பாகிஸ்தானின் முகமது ரிஸ்வானை பின்னுக்குத் தள்ளி, அந்த இடத்தைப் பிடித்திருக்கிறார். 

    இதன் மூலம், இருபது ஓவர் பேட்டர்கள் தரவரிசையில் முதலிடத்துக்கு வந்த 2-ஆவது இந்தியர் என்ற பெருமையை சூர்யகுமார் யாதவ் பெற்றுள்ளார். முன்னதாக முதல் வீரர் விராட் கோலி இச்சாதனையை நிகழ்த்தியிருந்தார். 

    மேலும், பந்துவீச்சு பிரிவில் ரவிச்சந்திரன் அஸ்வின் 18-வது இடத்திலும், அர்ஷ்தீப் சிங் 16 இடங்கள் ஏற்றம் கண்டு 27-வது இடத்திலும் உள்ளனர். 

    வீட்டிலிருந்தே பணிபுரியுங்கள்! காற்று மாசால் தில்லி சுகாதாரத்துறை அதிரடி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....