Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுசூர்யகுமார் யாதவ் அதிரடியால் வெற்றி பெருமூச்சு விட்ட இந்தியா

    சூர்யகுமார் யாதவ் அதிரடியால் வெற்றி பெருமூச்சு விட்ட இந்தியா

    இந்திய அணி மூன்றாவது இருபது ஓவர் ஆட்டத்தில் 91 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி தொடரை 2-1 என கைப்பற்றியது.

    இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தச் சுற்றுப்பயணத்தில் இலங்கை அணி 3 இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாட உள்ளது. 

    கடந்த 3-ஆம் தேதி 3 இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது இருபது ஓவர் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி இலங்கையை அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றியை பதிவு செய்தது. 

    இதைத்தொடர்ந்து, புனேவில் உள்ள மஹாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியிடம் தோல்வியடைந்தது. 

    இதனால், 3 இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்தன. இந்நிலையில், தொடர் யாருக்கு என்பதை முடிவு செய்யும் இறுதிப் போட்டியானது கடந்த சனிக்கிழமை இரவு 7 மணிக்கு ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. 

    இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனால், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷன் கிஷன் மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். இதில் இஷன் கிஷன் 1 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்து அதிர்ச்சி அளித்தார். இருப்பினும், சுப்மன் கில் மற்றும் திரிபாதி முறையே 46, 35 ரன்களில் பெவிலியன் திரும்பினர். 

    இதனால் இந்திய அணியானது பெரும் சவாலை எதிர்கொண்டது. ஆனால், இந்த சவாலை சூர்யகுமார் யாதவ் திறம்பட எதிர்கொண்டார். சூர்யகுமார் யாதவ் தனது அதிரடி ஷாட்டுகளால் 51 பந்துகளில் 112 ரன்கள் எடுத்து இந்திய அணியை 228 ரன்கள் எடுக்க வைத்தார். 

    மொத்தத்தில், இந்திய அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து, இலங்கை அணி 226 ரன்கள் எடுத்தால்தான் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.

    ஆனால், இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் இலங்கை 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் இந்திய அணி மூன்றாவது இருபது ஓவர் ஆட்டத்தில் 91 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி தொடரை 2-1 என கைப்பற்றியது.

    இதைத்தொடர்ந்து, இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே நடைபெறவுள்ள ஒருநாள் தொடரானது வருகிற ஜனவரி 10-ஆம் தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ரஜினியின் ஜெயிலரில் மோகன்லால்…. என்ன சொல்கிறது படக்குழு?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....