Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்புதுச்சேரி ரவுடி கொலையில் திடீர் திருப்பம்! கஞ்சா வியாபாரி உள்பட 4 பேர் கைது

    புதுச்சேரி ரவுடி கொலையில் திடீர் திருப்பம்! கஞ்சா வியாபாரி உள்பட 4 பேர் கைது

    புதுச்சேரி வில்லியனூரில் ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் கஞ்சா வியாபாரி உள்பட அவரது கூட்டாளிகள் என 4 பேரை போலீசார் கைது செய்தனர். கஞ்சா விற்பதாக போலீசில் காட்டி கொடுத்ததால் கொன்றதாக குற்றவாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் கணுவாப்பேட் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் என்ற பிரவீன்குமார் (வயது 24). பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில் நேற்று முன்தினம் ஆரியபாளையம் சங்கராபரணி ஆற்றங்கரையோரம் பிரவீன்குமார் வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வில்லியனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரவீன்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பிரவீன்குமாரை கோட்டைமேடு பகுதியை சேர்ந்த கஞ்சா வியாபாரி முகிலன் (23) கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து இரவோடு இரவாக அவரை போலீசார் கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து அவர் அளித்த வாக்குமூலத்தில், கஞ்சா வழக்கு ஒன்றில் சிக்கி முகிலன் சிறை சென்றதாகவும், இதற்கு பிரவீன்குமார் தான் காரணம் என எண்நியூ அவர், தன்னை போலீசில் காட்டி கொடுத்ததால் பிரவீன்குமார் மீது மிகுந்த ஆத்திரத்தில் இருந்தார். எனவே அவரை சமயம் பார்த்து தீர்த்துக்கட்ட முகிலன் முடிவு செய்தார். சிறையில் இருந்து வெளியே வந்த முகிலன், பிரவீன்குமாரின் நடமாட்டத்தை கண்காணித்து பின்னர் நைசாக பேசி பிரவீன் குமாரை மது குடிக்க முகிலன் அழைத்துள்ளார்.

    அவரும் வர சம்மதிக்கவே, 2 பேரும் சேர்ந்து சங்கராபரணி ஆற்றங்கரையோரம் அமர்ந்து மதுகுடித்துள்ளனர். அவர்களுடன் முகிலனின் கூட்டாளிகளான சிறுவன் உள்பட 3 பேரும் வந்து மது அருந்தியுள்ளனர். போதை தலைக்கேறியதும் முகிலன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தனது கூட்டாளிகள் உதவியுடன் பிரவீன்குமாரை வெட்டி படுகொலை செய்துள்ளார். இவ்வாறு போலீசார் கூறினார்.
    இதனையடுத்து போலீசார் கஞ்சா வியாபாரி முகிலன் அவரது்கூட்டளிகள் 3 பேர் என 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் ஒருவன் சிறுவன் என்பது குறிப்பிடத்தக்கது.

    சிறுமியை துண்டு துண்டாக வெட்டி வீசிடுவேன் என்று கூறிய வாலிபர் கைது

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....