சென்னை: சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும், நகரின் ஒரு சில இடங்களில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
கிண்டி, எழும்பூர், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, சிந்தாதிரிப்பேட்டை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், புரசைவாக்கம், அயனாவரம், தியாகராய நகர், அடையாறு, சைதாப்பேட்டை, ஆலந்தூர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
அதேபோல், புறநகர்ப் பகுதிளான மேடவாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், பல்லாவரம், மீனம்பாக்கம், குரோம்பேட்டை, பூந்தமல்லி, திருவேற்காடு, காட்டுப்பாக்கம், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கு விமான போக்குவரத்து ஆணையரகம் நோட்டீஸ்